#BIG BREAKING:-தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்..!
#BIG BREAKING:-தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்..!
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த ரசிகர்கள், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.