டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து!!

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து!!;

Update: 2022-07-18 04:45 GMT

ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா கடந்த 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 17 வயது இருக்கும்போது 2004-ம் ஆண்டு விம்பிள்டன் படத்தை வென்ற இளம் வீராங்கனையாக சாதனை புரிந்தார். இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டில் யுஎஸ் ஓபன், 2008-ல் ஆஸ்திரேலியா ஓபன், 2012 மற்றும் 2014-ல் பிரென்சு ஓபன் தொடர்கள் வென்று சாதனை புரிந்தார்.

2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்த இவர், 2019-ம் ஆண்டு தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதியுற்றார். இதன்பின்னர் அவரது டென்னிஸ் வாழ்க்கை கடினமானதாகவே அமைந்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.

சமீபத்தில், 35-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷரரபோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கதிதில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு பேருக்கும் சேர்த்து  நான் கேக் உண்கிறேன் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ஷரபோவாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தியோடர் என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், குழந்தை மற்றும் கணவரின் புகைப்பட்த்தையும் பதிவிட்டுள்ளளார். அதில், ‘எங்களது சிறிய குடும்பம் கேட்டுக்கொண்ட அழகான, சவால் நிறைந்த வெகுமதியான பரிசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News