டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து!!
டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து!!;
ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா கடந்த 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 17 வயது இருக்கும்போது 2004-ம் ஆண்டு விம்பிள்டன் படத்தை வென்ற இளம் வீராங்கனையாக சாதனை புரிந்தார். இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டில் யுஎஸ் ஓபன், 2008-ல் ஆஸ்திரேலியா ஓபன், 2012 மற்றும் 2014-ல் பிரென்சு ஓபன் தொடர்கள் வென்று சாதனை புரிந்தார்.
2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்த இவர், 2019-ம் ஆண்டு தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதியுற்றார். இதன்பின்னர் அவரது டென்னிஸ் வாழ்க்கை கடினமானதாகவே அமைந்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.
சமீபத்தில், 35-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷரரபோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கதிதில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு பேருக்கும் சேர்த்து நான் கேக் உண்கிறேன் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ஷரபோவாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தியோடர் என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், குழந்தை மற்றும் கணவரின் புகைப்பட்த்தையும் பதிவிட்டுள்ளளார். அதில், ‘எங்களது சிறிய குடும்பம் கேட்டுக்கொண்ட அழகான, சவால் நிறைந்த வெகுமதியான பரிசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.