செய்தியாளர் போல் பேசி அசத்திய சிறுவன்... வைரல் வீடியோ!!

செய்தியாளர் போல் பேசி அசத்திய சிறுவன்... வைரல் வீடியோ!!

Update: 2022-07-17 08:08 GMT

நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அணை நிரம்பி காட்டாற்று வெள்ளம் சென்றதை படம் பிடித்து செய்தியாளராக மாறிய சிறுவனின் வீடியோ வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் பகுதிகளில் அணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடலூர் சொக்கநள்ளி அருகே உள்ள ஒரு அணையில் காட்டாற்று வெள்ளம் நிரம்பி செல்வதை தொலைக்காட்சி செய்தியாளர்கள் தொகுத்து வழங்குவது போல் சிறுவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் டேம் நிறைந்து காங்கிரட்டில் மட்டுமே தண்ணீர் செல்கிறது.

அதனால் நமது தனியார் பள்ளியை அரசு திட்டியதால் இரண்டு மாதத்திற்கு விடுமுறை அளித்துள்ளதாக அச்சிறுவன் கூறியுள்ள வீடியோ தற்போது நகைச்சுவையை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது.

newstm.in

Similar News