மத்திய பிரதேச மாநிலத்தில் போர்படாவ் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் தோடவா என்பவரின் மனைவி திடீரென மாயமானார்.

இதனால், ராகுல் தோடவா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரது மனைவி கிடைக்கவில்லை. பிறகு அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டில் மறைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தது அவருக்கும்,ராகுல் தோடவா கணவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தனது மனைவியைச் சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்.


பிறகு அவரது உறவினர்கள் ராகுலைத் தோல்மீது சுமக்கவைத்து அந்த பெண்ணை தெரு தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து போலீஸார் அந்த கிராமத்திற்குச் சென்று அந்த பெண்ணை கொடுமைப் படுத்தியதாக ராகுல் உட்பட 14 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in