அடுத்த போர்.. அமெரிக்காவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த சீனா !

அடுத்த போர்.. அமெரிக்காவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த சீனா !;

Update: 2022-06-11 18:01 GMT

தைவானை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் அதன் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என சீனா அதிரடி எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து வருவது மூன்று மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிவிட்ட ரஷ்யா, முக்கிய நகரங்களில் இருந்த கட்டிடங்களை சிதைத்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போரால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருவதால் போர் நீடித்து வருகிறது. 

இதனால் மூன்றாவது உலகப்போர் சூழல் அபாயம் உள்ளதாக பல்வேறு நிபுணர்கள் கணித்து வருகின்றனர். எனினும் அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சீனா போர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீண்டும் அவ்வகையிலான அச்சம் எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் ஷங்ரிலா பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பில் தைவான் பிரச்னையை பற்றி விவாதித்தனா். 

அப்போது, தைவான் நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தினாா். இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், தைவானை நாட்டின் ஒரு பகுதியாக கருதுவதாகவும், தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போா் தொடுக்க சீனா தயங்காது என்றும் எச்சாித்தாா்.

மேலும் தைவான் சீனாவின் தைவான் என்றும் சீனாவை கட்டுப்படுத்த தைவானை கட்டுப்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது எனவும் எச்சரித்தார். 
தைவானை தனி நாடாக ஏற்க மறுக்கும் சீனா, அதை தன்னுடைய நாட்டுடன் இணைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது.  


newstm.in

Tags:    

Similar News