நடிகை கத்ரீனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது !

நடிகை கத்ரீனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது !;

Update: 2022-07-25 19:43 GMT

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்கி கவுசல். அதேபோல் முன்னணி நடிகையான கத்ரீனா கைப் இவர் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் திருமணம் பாலிவுட் திரையுலகில் பெரியளவில் நடைபெற்றது. நீண்ட நாள் காதலுக்கு பிறகு இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகின்றனர். திரையுலகில் இவர்கள் இருவரும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர். இருவரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். இந்த நிலையில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் இருவருக்கும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதனால் பாலிவுட் ஜோடி இருவரும் மும்பை சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடை கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்த மன்விந்தர் சிங் என்ற நபரை மும்பை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

கத்ரீனாவின் தீவிர ரசிகரான மன்விந்தர் சிங் கத்ரீனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. அதனால்தான் கடந்த சில மாதங்களாக, அவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவர்களை தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 
newstm.in

Tags:    

Similar News