எலிக்காக வைத்திருந்த பொறி.. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம் !!

எலிக்காக வைத்திருந்த பொறி.. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம் !!

Update: 2022-05-22 08:42 GMT

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சில்வன மேரி (23). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

மேரியின் வீட்டில் எலித்தொல்லை இருந்ததால் அவைகளை கொள்வதற்காக எலி மருந்தை வாங்கிவந்து உணவில் கலந்து குடும்பத்தினர் வைத்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் சில்வன மேரிக்கு தெரியவில்லை. இதனால் மேரி எலிக்கு வைத்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வாந்தி, மயக்கம் என உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். உடலிலை மிகவும் மோசமான நிலையில் மேரியை பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சில்வன மேரிக்கு உரிய சிகிச்சை அளித்தும் அவை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

எலிக்காக வத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

newstm.in
 

Similar News