ஸ்டாலின் காரை நோக்கி பாய்ந்த பெண்.. திருப்பத்தூரில் பரபரப்பு..!
ஸ்டாலின் காரை நோக்கி பாய்ந்த பெண்.. திருப்பத்தூரில் பரபரப்பு..!
புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பத்தூர் வந்துள்ளார்.
இந்நிலையில், சாலையில் முதல்வரின் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் மனு கொடுக்க நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் போலீசாரின் பாதுகாப்பை மீறி முதல்வரின் காரை நோக்கி சத்தமிட்டபடி ஓட முயன்றார்.
அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன முதல்வர், அந்தப் பெண்ணை அழைத்து அவரிடமிருந்த மனுவை பெற்றுக் கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.