தோழியுடன் உடலுறவின் போது உயிரிழந்த இளைஞர்.. பகீர் பின்னணி
தோழியுடன் உடலுறவின் போது உயிரிழந்த இளைஞர்.. பகீர் பின்னணி
இன்றைய காலத்தில் பதின்ம வயதிலேயே காதலும் காமமும் அதிகரித்துவிட்டது. இதில் காதலிக்கும் போதே பலர் உடலுறவில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற நேரங்களில் அவர்கள் பல சிக்கல்களில் அகப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இப்படியான ஒரு சிக்கல் காதல் ஜோடிக்கு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் உடலுறவு கொண்டுள்ளார். உடலுறவின்போதே இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் என்னசெய்வது என தெரியாமல் விழித்தார். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, இளைஞர் மது அருந்தி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அவரது சட்டைப்பையில் இருந்து வயாகரா மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.
நீண்ட உடலுறவுக்காக மது அருந்திவிட்டு, வயாகரா மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை செய்து வருவதாகவும் உயிரிழந்த இளைஞருடன் உடலுறவு கொண்ட பெண் தோழியிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்தது. அதாவது 25 வயது இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் இருவீட்டாரும் சேர்ந்து காதலர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து நாள் குறிக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே உடலுறவில் ஈடுபட்டபோது உயிரிழந்த நிகழ்வு நடந்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.