இனி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் கிடையாது.. வெளியானது அறிவிப்பு !
இனி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் கிடையாது.. வெளியானது அறிவிப்பு !;
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மாணவிகளுக்கு என்று தனியாகவும், மாணவர்களுக்கு என்று தனியாகவும் பள்ளிகள் இயங்கி வருகிறது. எனினும் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்படுகின்றன. இந்த நிலையில் இவ்வாறு தனித்தனியாக இயங்கும் பள்ளிகளை மூட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு அப்பள்ளிகளை இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன்பு பள்ளிகளில் உள்ள கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணைக்கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தக் கல்வியாண்டு முதல் இணைக்கல்வியை அமல்படுத்த 90 நாட்களில் செயல்திட்டத்தை உருவாக்குமாறு கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in