மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் இவை தான்..!!
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் இவை தான்..!!;
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்; 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும் என்ன அறிவித்தார்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இந்த சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவின் விவரம்:
திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.
வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி.
இது குறித்து, முதலமைச்சர் கூறுகையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.