இவர்கள் ரேஷன் கார்டை திருப்பி கொடுக்க வேண்டும்.. அரசு திடீர் உத்தரவு !!
இவர்கள் ரேஷன் கார்டை திருப்பி கொடுக்க வேண்டும்.. அரசு திடீர் உத்தரவு !!
தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டை உடனடியாக சரண்டர் செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பயனாளிகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு சார்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஒவ்வொரு மாநிலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்திலும் ரேஷன் கடையில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் வந்த பிறகு ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்காமல் இருந்தால் அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் தகுதியுடைய பயனாளிகள் என்பதற்கும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் பயன்கள் கிடைக்கும். அதுவும் 18 வயதைத் தாண்டியவராக இருக்க வேண்டும். ஒருவேளை குடும்பத் தலைவர் 60 வயதுக்கு மேல் இருந்து அவர் நோய்வாய்ப்பட்டு அவரது குடும்ப வருமானம் மாதத்துக்கு 15,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அந்த ரேஷன் பலன்களை குடும்ப உறுப்பினர்கள் பெறலாம்.
கீழ்க்காணும் நபர்கள் கண்டிப்பாக தங்களது ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும்:
- நான்கு சக்கர வாகன வைத்திருப்பவர்கள்.
- 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள்.
- அரசு ஊழியர்கள்.
- வருமான வரி செலுத்துவோர்.
- வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள்.
- 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள்.
- நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கும் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள்.
- ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள்.
newstm.in