மூன்றாவது கோல்டன் டக்.. தொடரும் கோலியின் மோசமான ஃபார்ம் !!
மூன்றாவது கோல்டன் டக்.. தொடரும் கோலியின் மோசமான ஃபார்ம் !!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி , நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி அதே வீரர்களுடன் களமிறங்கியது. ஐதராபாத் அணியில் சுச்சித் மற்றும் ஆப்கான் வீரர் ஃபருக்கி சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜெகதிஸ் சுச்சித், முதல் பந்தை வீச, அதேனை விராட் கோலி மிட் விக்கெட் பகுதியில் அடிக்க முற்பட்டு வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். இதனையடுத்து முதல் பந்திலேயே ஆபத்து நீங்கிவிட்டது என ஐதராபாத் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
இதற்கு முன்பு விராட் கோலி குறைவான ரன்களை அடித்தது 2017ஆம் ஆண்டு தான். அதில் 10 போட்டியில் விளையாடி 308 ரன்களை விராட் கோலி அடித்துள்ளார். தற்போது குறைந்தது கோலிக்கு 2 போட்டிகள் எஞ்சி உள்ளன. அதில் கோலி எதாவது ரன் அடித்தால் மட்டுமே 300 ரன்களை தொட முடியும்.
கடந்த போட்டியிலும் மொயின் அலி பந்தில் தான் போல்ட் ஆனார். இதனால் அவர் சிறிதுகாலம் ஓய்வுஎடுத்துக்கொண்டு களமிறங்குவதே சரியாக இருக்கும் என பலரும் கருத்துகூறி வருகின்றனர்.
newstm.in