அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதுடன், அவரிடமிருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


அதிமுக கட்சி சார்பில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.