ரஷ்யாவை தாக்க இதுதான் சிறந்தவழி.. அமெரிக்க ராணுவத்துக்கு யோசனை கூறிய டிரம்ப்..
ரஷ்யாவை தாக்க இதுதான் சிறந்தவழி.. அமெரிக்க ராணுவத்துக்கு யோசனை கூறிய டிரம்ப்..
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் தொடங்கிய நேரத்தில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என கூறப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமானது.
எனினும் அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா சண்டையிடாது என்றும் அதிபர் பைடன் தெரிவித்துவிட்டார். இதனால் உக்ரைன் அதிபர் வெளிப்படையாக அமெரிக்கா, நேட்டோ படைகளை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப், ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோ பைடன் கூறி வருகிறார். இப்படி பேசுவதை முதலில் அவர் நிறுத்த வேண்டும். மனிதநேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நடைபெற நாம் விடக்கூடாது. நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது, என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் நிம்மதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம், எனக் கூறினார்.
newstm.in