திருப்பதி கோவில் வரலாற்றில் இதுவே அதிகபட்ச காணிக்கை.. ஒரே நாளில் இத்தனை கோடியா?

திருப்பதி கோவில் வரலாற்றில் இதுவே அதிகபட்ச காணிக்கை.. ஒரே நாளில் இத்தனை கோடியா?

Update: 2022-07-05 17:19 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதன்முறையாக ஒரேநாளில் ரூ. 6.18 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. வழக்கமாக ஜூன் 2ஆவது வாரத்திலேயே பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து விடும்.

ஆனால் இந்தாண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் தொடங்கியும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளே வியப்படைந்துள்ளனர். கியூ காம்பளக்ஸ்கள் நிரம்பி சுமார் 3 கிமீ தூரம் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். 

இதேபோல் நேற்று ஒரேநாளில் 77,907 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38,267 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இலவச தரிசனத்தில் 12 மணி நேரமும், ரூ. 300 கட்டணம் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசித்தனர்.

இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ. 6.18 கோடி காணிக்கை கிடைத்தது. இது தேவஸ்தான வரலாற்றில் முதன்முறை ஆகும். கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ரூ. 5.73 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்ததே அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக இருந்தது.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகபட்ச காணிக்கை கிடைத்துள்ளது. வழக்கமாக பிரம்மோற்சவ நாட்களில் மட்டும்தான் அதிகபட்ச காணிக்கை கிடைக்கும். என்ற நிலை இப்போது மாறியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News