நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை தள்ளிப்போட இதுதான் காரணம்!!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை தள்ளிப்போட இதுதான் காரணம்!!

Update: 2022-03-03 07:48 GMT

நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.

நீண்ட நாட்களாக காதலித்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று எல்லோரும் கேட்க தொடங்கிவிட்டனர். நயன்தாராவுக்கு 37 வயதாகிவிட்டது, இனியும் திருமணத்தை தள்ளிப் போடாதீர்கள் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்திருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்ததால் தான் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது.

வயது எத்தனை ஆனால் என்ன, குழந்தை வேறு ஒருவர் தானே பெற்றுத்தரப்போகிறார் என்ற எண்ணத்தில் திருமணம் மீது ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

 

Similar News