வாகன ஓட்டிகளே உஷார்..!! இனி இப்படி ஹெல்மெட் அணிந்தால் ரூ.1,000 அபராதம்..!!
வாகன ஓட்டிகளே உஷார்..!! இனி இப்படி ஹெல்மெட் அணிந்தால் ரூ.1,000 அபராதம்..!!
வாகன ஓட்டிகள் சரியான முறையில் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும், ஹெல்மெட் அணிவதற்கான விதிகளை மீறினாலும் அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி,
- நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை ஓட்டும் போது ஹெல்மெட்டின் ஸ்ட்ரைப் அவிழ்க்கப்பட்டிருந்தால், ரூ. 1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
- உங்கள் ஹெல்மெட்டுக்கு BSI (Bureau of Indian Standards) சான்றிதழ் இல்லை என்றால், உங்களிடம் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படலாம்.
- சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற பிற போக்குவரத்து விதிகளை மீறினால், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும்.
- வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால், ரூ. 20,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இதன் மூலம், இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களை குறைக்க இது உதவியாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.