சொந்த தொழில் தொடங்க ஆசையா? - சூப்பர் திட்டம்.. அரசே எல்லாம் கொடுத்து உதவுகிறது !!
சொந்த தொழில் தொடங்க ஆசையா? - சூப்பர் திட்டம்.. அரசே எல்லாம் கொடுத்து உதவுகிறது !!
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு அரசு உதவுகிறது.
படித்து முடித்த இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு கனவு இருக்கும். எப்படியாவது சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று. அப்படி நீக்ள் தொழில் தொடங்க விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. இதற்கு மத்திய அரசே உங்களுக்கு உதவி செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜெனரிக் மெடிக்கல் ஷாப் திறக்கலாம்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்ஔஷதி யோஜனா திட்டம் என ஒரு திட்டம் உள்ளது. பொதுமக்கள் மருந்துகளுக்காக அதிகம் செலவு செய்து வருவதால் அதன் சுமையைக் குறைக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் சொந்தமாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் உதவுகிறது. இங்கு சாதாரண மெடிக்கல் ஷாப்பை விட 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்.
ஜன்ஔஷதி மையங்களில் 3 வகையான பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் எந்தவொரு நபராலும் அல்லது வேலையில்லாத மருந்து நிபுணராலும் தொடங்கப்படலாம். இரண்டாவது பிரிவில், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் சமூக சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றால் தொடங்கப்படலாம். மூன்றாவது பிரிவில், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்சிகள் அடங்கும்.
ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் மெடிக்கல் ஷாப் திறப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பிரதான் மந்திரி ஜன்ஔஷதி கேந்திரா என்ற பெயரில்தான் மெடிக்கல் ஷாப் திறக்கப்பட வேண்டும். மருந்துக் கடைக்கு 120 சதுர அடி பரப்பளவு தேவை. இந்தக் கடையைத் தொடங்குவதற்கு சுமார் 900 மருந்துகளை அரசே வழங்குகிறது என்பது இதன் சிறப்பு அம்சங்களாகும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் http://janaushadhi.gov.in/online_registration.aspx என்ற இணையதளத்தில் சென்று படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஜன்ஔஷதி கேந்திராவை திறப்பதற்கு முன் இந்தப் படிவத்தின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை இந்திய பார்மா பொதுத் துறை நிறுவனமான (BPPI) பொது மேலாளருக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
newstm.in