ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை.. இனிமேல் அபராதம், ஜெயில் உறுதி !!

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை.. இனிமேல் அபராதம், ஜெயில் உறுதி !!

Update: 2022-02-24 08:31 GMT

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது போன்ற குற்றங்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா? சிறை தண்டனையும் உண்டு.

தொலைதூர பயணத்திற்கும், ஏழை- எளிய மக்களின் பயண விருப்பமாக இருப்பது ரயில் பயணம். இதனால் ரயிலில் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினமும் ரயில்களில் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

ஆனால், இதில் சோகம் என்னவென்றால் நிறையப் பேர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றனர். சோதனையின் போது அவர்கள் சிக்கினால் அபராதம், சிறை தண்டனை போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அபராதம், தண்டனை தொடர்பான முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

டிக்கெட் அல்லது பாஸ் இல்லாமல் பயணம்:

ரயில்வே சட்டம் பிரிவு 138இன் கீழ், பயணித்த தூரம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து எவ்வளவு கட்டணமோ அது வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.250 ரூபாய். இவை இரண்டில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்.

மோசடியான பயணம்:

ரயில்வே சட்டம் பிரிவு 137இன் கீழ் 6 மாத சிறை தண்டனை. ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும்.

அலாரம் சங்கிலி இழுத்தல்:

ரயில்வே சட்டம் பிரிவு 141இன் கீழ் 12 மாத சிறை தண்டனை. 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி:

ஊனமுற்ற பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் பிரிவு 155 (அ)இன் படி, 3 மாத சிறை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும்.

அத்துமீறி நுழைதல்:

ரயில்வே சட்டம் பிரிவு 147இன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும்.

மேற்கூரையில் பயணம் செய்தல்:

ரயில்வே சட்டம் பிரிவு 156இன் கீழ் 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

தொல்லை கொடுப்பது, குப்பை கொட்டுவது:

ரயில்வே சட்டம் பிரிவு. 145 (b)இன் கீழ் முதல் குற்றத்திற்கு ரூ.100 அபராதம், 2வது மற்றும் தொடர்ந்து செய்தால் ரூ.250 அபராதமும் ஒரு மாதம் சிறை தண்டனையும்.

விளம்பரப்படுத்துதல்:

ரயில்வே சட்டம் பிரிவு 143இன் கீழ் 3 ஆண்டுகள் சிறை. 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

அங்கீகரிக்கப்படாத விற்பனை:

ரயில்வே சட்டம் பிரிவு 144இன் கீழ் ஒரு வருடம் சிறை., அபராதம் குறைந்தது 1,000 ரூபாய். அதிகபட்சம் 2,000 ரூபாய் அல்லது இரண்டும்.
.

newstm.in

Similar News