என்ன ஒரு கடமை உணர்ச்சி.. சஸ்பெண்ட் தகவல் தெரியாமல் அலுவலகம் வந்த அதிகாரி..!

என்ன ஒரு கடமை உணர்ச்சி.. சஸ்பெண்ட் தகவல் தெரியாமல் அலுவலகம் வந்த அதிகாரி..!

Update: 2022-07-21 13:50 GMT

திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, சுமதி என்பவர் சார் - பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில், ஆவடி வட்டம், மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் மற்றும் திருமணம் செய்து வைப்பதாக சென்னை பத்திரப்பதிவு துறை ஐஜி-க்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, திருவள்ளூர் சார் - பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப் பதிவு ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார்

இந்த நிலையில், தன்னை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதை அறியாமல், நேற்று காலை சுமதி வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்போது அவரிடம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தகவலை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சிறிது நேரம் செய்வதறியாமல் இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்தத் தகவல் அறிந்ததும் செய்தியாளர்கள் திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். உடனே சுமதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Similar News