இங்கிலாந்து அணி என்ன செய்யப்போகிறது ? - இந்தியா பந்துவீச்சு.. விராட் கோலி அவுட்

இங்கிலாந்து அணி என்ன செய்யப்போகிறது ? - இந்தியா பந்துவீச்சு.. விராட் கோலி அவுட்;

Update: 2022-07-12 17:56 GMT

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். இதனால் விராட் கோலி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதன்மூலம்  விராட் கோலிக்குபதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் களமிறங்கியுள்ளார். 

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து அணி : ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்,லிவிங்ஸ்டன், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி
 
newstm.in

Tags:    

Similar News