நான் ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.. 2 குழந்தைகளுக்கு தாயான நடிகை விளக்கம் !!

நான் ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.. 2 குழந்தைகளுக்கு தாயான நடிகை விளக்கம் !!;

Update: 2022-07-02 19:19 GMT

நடிகை சுஷ்மிதா சென்-ஐ தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்கமுடியாது. ஏனெனில் தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஷ்மிதா சென். இப்படம் பெரும் வெற்றிபெற்று இன்றும் போற்றப்படுகிறது.

ஆனால், நடிகை சுஷ்மிதா சென் அதன்பிறகு அதிகளவில் இந்தி மொழி படங்களில் தான் நடித்துள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். இந்நிலையில், ட்விங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் 'தி ஐகான்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை அவர் விளக்கி இருந்தார்.

அப்போது பேசிய அவர், அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அந்தக் காரணத்தால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இதில் துளியளவும் தொடர்பு இல்லை. என் வாழ்வில் இருந்த நபர்களை எனது குழந்தைகள் இருவரும் மனதார ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.

மூன்று முறை நான் திருமணம் செய்துகொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. ஆனால், கடவுள் என்னை அதிலிருந்து காத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் சொல்ல முடியாது. என்னையும், எனது குழந்தைகளையும் கடவுள் தான் காத்து வருகிறார், என தெரிவித்துள்ளார்.

46 வயதான நடிகை சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News