சித்ராவை ஹேம்நாத்தே அனுப்பி வைப்பார்? - யார் அந்த சத்யா !! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை
சித்ராவை ஹேம்நாத்தே அனுப்பி வைப்பார்? - யார் அந்த சத்யா !! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சின்னத்திரை நடிகை சித்ரா மரணம். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி சித்ரா நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது அடுக்கடுக்கான மோசடி குற்றசாட்டுகள் உள்ளன.
ஆனால், ஜாமினில் வெளிவந்த ஹேம்நாத் தனது மனைவி மரணத்தில் அரசியல் பிரபலங்களுக்கும், பணபலம் படைத்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை மீடியா முன்பே வைத்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ராவின் தாய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அவர் குறிப்பிட்டிருந்த சத்யா என்ற பெயர் சித்ரா விவகாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
இந்த சத்யா யார் என விசாரித்தப்போது ஒரு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, ஒரு காலத்தில் விபச்சார வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை புவனேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர் சத்யா என கூறப்படுகிறது. இவரது வேலையே அரசியல் புள்ளிகளுக்கு சின்ன சின்ன நடிகைகளை சப்ளை செய்வதுதான். கட்சி பாகுபாடு இல்லாமல் பல அமைச்சர்கள் சத்யாவை அணுகி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி கொண்டதால் ரியல் எஸ்டேட் தொழிலும் சத்யா அசுர வளர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சத்யாவுடன் ஹேம்நாத்துக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. கஞ்சா, செக்ஸ், போதை ஆகியவற்றில் மிதந்ததாக கூறப்படும் ஹேம்நாத்துக்கு சித்ரா பழக்கமானதுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளதாம். சின்னத்திரையுலகில் டாப் லிஸ்ட்டில் ஜொலிக்க தொடங்கிய சித்ராவுக்கு சத்யா மற்றும் சில மாபியா கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கூடவே கஞ்சா, குடிபோதை பழக்கத்தையும் சித்ரா கற்றுக்கொண்டுள்ளார்.
திரை மறைவில் சித்ராவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருக்கும் விஷயங்கள் ஹேம்நாத்துக்கு தெரிந்துவிட்டதால் பயந்துபோன சித்ரா ஹேம்நாத்தை காதலித்ததாகவும், ஆனால், திருமணம் செய்துகொள்வதில் அவருக்கு மனப்பூர்வ விருப்பம் இல்லை எனவும் கூறுகின்றனர். மேலும், சித்ராவின் அந்தரங்க விஷயங்களை தெரிந்துகொண்டதால் ஹேம்நாத்தும் பிசினஸ் மைண்டில் சித்ராவுடன் பழகி உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
எல்லாத்தைவிட உச்சமாக, சித்ராவை விஐபிகளுக்கு ஹேம்நாத் அனுப்பி வைத்ததாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்பட்டதாக பிரபல புலனாய்வு பத்திரிகையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் விருப்பப்பதை போல சித்ரா வாழ்ந்து வந்த சூழலில் ஹேம்நாத் கொடுத்த சித்திரவதையும், தன்னை பற்றிய தனிப்பட்ட ரகசியங்களை அவன் மூலம் கசிந்துவிடக்கூடாது என்பதாலையும்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக அதே பத்திரிகை கூறியுள்ளது.
சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் இப்போது பணி ஒய்வு பெற்றுவிட்டார். அவர் பகிர்ந்ததாக வெளியாகியுள்ள தகவலில், சித்ராவின் ஹேண்ட் பேகில் கஞ்சா நிரப்பப்பட்ட 15 சிகரெட்டுகள், தீ பெட்டி ஆகியவை இருந்துள்ளது. பட்டு புடவையில் பின் கழுத்து பக்கமாக சுருக்குப்போட்ட கொண்ட சித்ரா தூக்கில் தொங்கியபோது அதனை அவிழ்க்க முயற்சித்துள்ளார் என்றும் அவரது முகத்தில் நக கீறல்கள் ஏற்பட அதுவே காரணம் என்றும் அந்த மருத்துவர் விளக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் விரைவில் நடிகை சித்ரா விவகாரம் பூதகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in