இப்படியும் நடக்குமா..? பெண் விமானியை காவு வாங்கிய கொசு..!!
இப்படியும் நடக்குமா..? பெண் விமானியை காவு வாங்கிய கொசு..!!;
இங்கிலாந்தின் சஃபோல்க் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரியானா பெப்பர் (21) என்ற இளம்பெண், பெல்ஜியம் நாட்டில் விமானியாக பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொசு ஒன்று அவரது நெற்றியில் கடித்துள்ளது. கொசு கடித்த இடம் வீக்கமடையவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர்கள் அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
ஆனால், இரண்டு நாட்களுக்குப் பின் ஒரியானா திடீரென மயங்கிவிழ, அவரை அவரது காதலரான ஜேம்ஸ் ஹால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனையில் அனுமதித்த மூன்று நாட்களுக்குப் பின் ஒரியானா உயிரிழந்துவிட்டார். அந்த கொசு கடித்ததால் ஒரியானாவுக்கு நெற்றியில் நோய்த்தொற்று உருவாகி இருக்கிறது.
அந்த தொற்றை உருவாக்கிய கிருமிகள் அப்படியே மூளைக்குப் பரவியதையடுத்து ஒரியானா உயிரிழந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி, தன் வாழ்நாளில் தான் இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.