செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா..!! குவியும் பாராட்டுக்கள்..!!
செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா..!! குவியும் பாராட்டுக்கள்..!!;
இந்தியாவின் இளம் செஸ் ஜாம்பவனாக பிரக்ஞானந்தா திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்று ஆடி வந்தார். கொரோனா காரணமாக இந்த போட்டித்தொடர் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா (16 வயது) அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரக்ஞானந்தா 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.
இந்த நிலையில், இரண்டு சுற்றாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான செஸ் ஜாம்பவானாகிய சீனாவைச் சேர்ந்த டிங் லிரேனுடன் மோதினர். இதில் டை பிரேக்கரில் டிங் லிரேன், பிரக்ஞானந்தாவை வீழ்த்தியதால் அவர் செசபிள் மாஸ்டர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஒரே ஒரு தவறான நகர்த்தலால் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். டிங் லிரேனுடன் தோல்வியை சந்தித்தாலும், அவருக்கு கடுமையான நெருக்கடி அளித்த பிரக்ஞானந்தாவிற்கு செஸ் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வேலை வ்ழங்கப்பட்டுள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.