பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றிய இளைஞர் சுட்டுக்கொலை.. தொடரும் பதற்றம்

பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றிய இளைஞர் சுட்டுக்கொலை.. தொடரும் பதற்றம்;

Update: 2022-05-28 08:42 GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் புகுந்து 18 வயது இளைஞர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 சிறுவர்கள் உள்பட 21 உயிரிழந்த கொடூரம்  நடந்துள்ளது. பள்ளி குழந்தைகளை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

அமெரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி இருக்கும் நிலையில், துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கையும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கடனாவில் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். பின்னர் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

newstm.in
 

Tags:    

Similar News