மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற மாமனார்.. உல்லாசத்திற்கு மறுத்ததால் கொடூரம்!!
மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற மாமனார்.. உல்லாசத்திற்கு மறுத்ததால் கொடூரம்!!
ஆசைக்கு இணங்க மறுத்ததால் மருமகளை கோடாரியால் வெட்டி கொலை செய்ததாக மாமனார் சரணடைந்தார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்துள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன்(48). இவர் சொக்கநாத புரம் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். அறிவழகன் தனது மனைவி, 2 மகன்களுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அறிவழகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அறிவழகனின் தந்தை பழனி, அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மகனின் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு நேராக தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த இடமான அறிவழகனின் தோட்டத்து வீட்டிற்கு போலீசார் சென்றனர்.
newstm.in