போலி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகைக்கு திடீரென உடல்நலக்குறைவு !!
போலி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகைக்கு திடீரென உடல்நலக்குறைவு !!
பிரபல நடிகையும் மம்தா கட்சி எம்பியுமான மிமி போலி தடுப்பூசி போட்டுக் கொண்டதால் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க பெரும் பரபரப்புடன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியினி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இந்த அக்கட்சியின் எம்பியாக பிரபல நடிகை மிமி சக்கரவர்த்தி உள்ளார். இந்த நிலையில், கொல்கத்தாவில் அண்மையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதையடுத்து அந்த முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் நடிகை மிமி சக்கரவர்த்தியும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் மிமிக்கு நேற்று திடீரென வயிற்று வலி, ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் உடனடியாக அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை மற்றும் விசாரணை அடிப்படையில் மிமி பங்கேற்ற கொரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்பது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த முகாமில் செலுத்தப்பட்ட மருந்தும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.
தேபஞ்சன் தேவ் என்ற பெயரில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட நபர் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்து மோசடி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற பெயரில் அவர் செலுத்தியது வெறும் எதிர்ப்பாற்றல் தரும் மருந்துகள் மட்டுமே என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து தேபஞ்சன் தேவ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி தடுப்பூசி போட்டு இவர்கள் இதுவரை ரூ.1 கோடி வரை பணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் மும்பையில் 2 ஆயிரம் பேருக்கு போலி தடுப்பூசி போட்டு ரூ.12 லட்சம் வரை ஒரு கும்பல் சுருட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in