உதயசூரியன் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின் - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

உதயசூரியன் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின் - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

Update: 2021-04-06 20:21 GMT

திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திமுகவிற்கு வாக்குசேகரித்தார்.தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் வந்து மு.க.ஸ்டாலின் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

அப்போது உதயநிதி உதயசூரியன் பொறித்த சட்டை அணிந்திருந்தார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அதிமுகவின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News