ATM: ஜனவரி முதல் மாறப்போகுது.. புது விதிமுறை அமல் !!

ATM: ஜனவரி முதல் மாறப்போகுது.. புது விதிமுறை அமல் !!

Update: 2021-12-25 07:46 GMT

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் ஏறக்குறைய எல்லோருமே ஏடிஎம் கார்டுகளை (டெபிட் கார்டு) பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், ஏடிஎம் கார்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ஜனவரி 1ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்துகிறது. இந்த விதிமுறைகளால் என்னென்ன மாறப்போகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

இதுவரையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்பட ஏராளமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வைத்து கட்டணம் செலுத்தும்போது முதல்முறை மட்டும் கார்டு விவரங்களை பதிவிட்டால் போதும். அடுத்தடுத்த முறை கார்டு பின்புறம் இருக்கும் 3 இலக்க CVV எண் மட்டும் வைத்து பணம் செலுத்திவிடலாம்.

ஏனெனில், உங்களின் கார்டு விவரங்களை அந்தந்த ஷாப்பிங் நிறுவனங்கள் சேமித்து வைக்கின்றன. ஆனால், ஜனவரி 1ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
 


எனவே, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்ட பிறகே பணம் செலுத்த முடியும். இதன்மூலம் உங்களது கார்டு விவரங்களை எந்தவொரு நிறுவனமும் சேமித்து வைக்க முடியாது. அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்ட கார்டு விவரங்களும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் அழிக்கப்பட்டுவிடும் என்பது நல்ல செய்தி தான். 

newsmtm.in

Similar News