சிறுவர்களுக்கு தடை.. ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை..!

சிறுவர்களுக்கு தடை.. ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை..!

Update: 2022-01-28 15:35 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள், பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் ஆட்சியர் சிவராசு குறிப்பிட்டிருக்கிறார்.

Similar News