உஷார்!! போன்ல இதை பயன்படுத்தினா பெண்களுக்கு செக்ஸ் தொல்லை!!

ட்ரூ காலர் செயலி உபயோகிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை..? கற்பு பறிபோகலாம் உஷாரு.!

Update: 2020-02-02 16:50 GMT

பெண்களின் மொபைல் எண்ணை ட்ரூ காலர் செயலியின் மூலம் கண்டறிந்து பிறகு அவர்களுடன் நெருங்கி பழகி நாசம் செய்து தப்பும் காம கொடூரன் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறான். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலானோர் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தியிருப்பர். நமக்கு தெரியாத எண்ணில் இருந்து கால் வந்தால், அழைப்பவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை காட்டி விடும் காரணத்தினால் இன்றும் 60 சதவிகித ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இந்த செயலியை உபயோகித்து வருகிறார்கள். இதனை பதிவிறக்கம் செய்பவர்கள் மட்டுமல்லாது அவர்கள் சேமித்து வைத்திருக்கும் நபர்களின் தகவல்களையும் இந்த செயலி எடுத்து கொள்வதால், இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்கள் தகவலையும் பிறர் காண முடிகிறது.

இதனை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர் , இச்செயலியை பயன்படுத்தி பெண்களின் எண்களை மட்டும் எடுத்துள்ளார். பின்னர் தான் எடுத்த பெண்களின் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படி அறிமுகம் கிடைக்கும் பெண்களிடம் பேச தொடங்கும் அவர்களை பின்னர் பேசி பேசி தனது வலையில் வீழ்த்துவார்.

இப்படி பல பெண்களை பேசி காதல் வலையில் விழச்செய்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்நிலையில் இதேபோன்று திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் எண்ணை எடுத்து அவருக்கு ஆபாச படம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரையடுத்து விசாரணை நடத்திய போலீசார் வினோத்தை கைது செய்தனர்.

அப்போது ட்ரூ காலர் செயலியில் எதாவது பத்து இலக்க எண்ணை டைப் செய்வதாகவும், அதில் பெண்கள் பெயர் இருந்தால் உடனே அவர்களை தொடர்பு கொண்டு பேசி மயக்கி உல்லாசம் அனுபவிப்பதாக வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். இதேபோன்று 50க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றியுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். 

newstm.in

Tags:    

Similar News