விமான நிலையத்தில் வெடி குண்டு!! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்
மங்களூர் ஏர்போர்ட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒரு மர்ம பையை விமான நிலையத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்.அங்கு வேகமாக வந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் குழு மர்ம பையை சோதனை நடத்தினார்கள். உடனே செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
மங்களூர் ஏர்போர்ட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒரு மர்ம பையை விமான நிலையத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள்,உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு வேகமாக வந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் குழு மர்ம பையை சோதனை நடத்தினார்கள். அதில் இருந்து IED-இன் அனைத்து கூறுகளும் இருந்தன.பேட்டரி, கம்பி, டைமர், சுவிட்ச், டெட்டனேட்டர் மற்றும் வெடிக்கும் பொருள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
இந்த சம்பவம் குறித்து சிசிடிவி விடியோவை ஆய்வு செய்ததில் ஆட்டோவில் வந்த நபர் ஒருவர், இந்த பையை விமான நிலையத்தில் வைத்து விட்டுச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்,விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
newstm.in