#BREAKING:- 2 மாதத்திற்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசம் !!
#BREAKING:- 2 மாதத்திற்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசம் !!
கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் சென்ற வருடம் நிவாரணம் அளிக்கப்பட்டதை போல் இந்த வருடமும் நிவாரணம் அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்காகவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச தானியங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் மே, ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.26,000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவர் என்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக 2 மாதங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.
Newstm.in