நடிகர் அஜித் திருவான்மியூர் தொகுதியில் வாக்களிக்க வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னபே வந்திருந்தார். அவர், திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் வந்தார்.

அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ணடதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முயன்றனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

வாக்கு சாவடிக்குள் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி வாக்களிக்க காத்திருக்கின்றனர். பின்னர் அஜித் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு தனது மனைவி ஷாலினியுடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.

newstm.in


 

Tags: