#BREAKING:- இந்திய வீரர் சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம்க்கு கொரோனா உறுதி..!!
#BREAKING:- இந்திய வீரர் சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம்க்கு கொரோனா உறுதி..!!
இந்திய இளம் வீரர்களைக் கொண்ட ஜூனியர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணியை மூத்த வீரர் ஷிகார் தவான் கேப்டன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி, டி20 தொடரில் பங்கேற்றது. நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, டி-20 தொடரை இந்திய அணி இழந்தது.
இதற்கிடையே, இந்திய வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கடந்த 27 ஆம் தேதி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதனால், எஞ்சியிருந்த 11 வீரர்கள் 2வது டி-20 போட்டியிலும் நேற்றைய போட்டியிலும் பங்கேற்றனர்.
இந்நிலையில், குருணால் பாண்ட்யாவை அடுத்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய வீரர் கவுதமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.