#BREAKING: 10,+1,+2 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!
#BREAKING: 10,+1,+2 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா மீண்டும் அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது. கொரோனா 2 வது அலைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலால் மீண்டும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது 3 வது அலைஉருவாகி இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10,+1 மற்றும் +2 மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.