#BREAKING: ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அதிரடி உத்தரவு!
#BREAKING: ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், மீண்டும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார்.
45 வயதைக் கடந்த இணை நோய்கள் ஏதும் இல்லாதவர்களும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.