#BREAKING பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்! மத்திய அரசு அறிவிப்பு !!

#BREAKING பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்! மத்திய அரசு அறிவிப்பு !!

Update: 2021-05-29 18:26 GMT

தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதித்து குழந்தைகளின் பெற்றோரை இழந்தால் அக்குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அவர்கள் இளம்வயதில் உதவித்தொகை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளளது. அதாவது, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வயது 18-ஐ அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் பிஎம் கேர்ஸ் நிதியகத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு அந்ததந்த மாநில அரசுகள் ஊக்கத்தொகை மற்றும் உதவிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளன. 

newstm.in

Tags:    

Similar News