கர்நாடகா மாநிலம் பெட்டதாபட்னா பகுதியில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மணமகனை, மணமகள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இளைஞர் ஒருவருக்கும், பெட்டதபுரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் மார்ச் 16ஆம் தேதி திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் தனியாக பேச வேண்டும் என மணமகள், மணமகனை ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார். அந்த இளைஞரும் பெண்ணிடம் பேச ஆசை ஆசையாக சென்றார். அங்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் அப்பெண் இளைஞரை கத்தியால் குத்தினார். 


அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அந்த பெண்ணுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்பதும், அதனால் அந்த இளைஞரை கொலை செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றும் அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

newstm.in

Tags: