மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு !!

மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு !!

Update: 2021-12-21 15:45 GMT

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவும் என்பதால் அனைத்து நாடுகளும் உஷார் நடவடிக்ககள் எடுத்துள்ளன.

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. முதன்முறையாக கடந்த 2ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் நுழைத்தது ஒமைக்ரான் தொற்று. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.  

இதனிடையே நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மகாராஷ்டிரா மாநிலம் - 54, டெல்லி - 54, தெலங்கானா - 20, கர்நாடகா - 19, ராஜஸ்தான் - 18, , கேரளா - 15, குஜராத் - 14, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 1, சண்டிகர் - 1, மேற்கு வங்காளம் - 1, தமிழ்நாடு - 1 ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


newstm.in

Tags:    

Similar News