எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு செம ஜாக்பாட்.. ரூ.1.5 லட்சம் சலுகை !!

எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு செம ஜாக்பாட்.. ரூ.1.5 லட்சம் சலுகை !!

Update: 2022-01-07 07:15 GMT

எலெக்ட்ரிக் கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம் என்ற கவர்ச்சிகரமான சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகனங்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் நிதி விவகாரம் பெரும் சுமையாக உள்ளது. இதனால் தற்போதுத இந்தியர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துவிட்டன. எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

ஏற்கெனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இத்துடன் சேர்த்து வரிச் சலுகைகளையும் பெறலாம் என தற்போது அறிவித்துள்ளது. அதாவது, எலெக்ட்ரிக் கார் வாங்குவதற்கு கடன் வாங்கினால் அதற்கான வட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம்.

எலெக்ட்ரிக் கார் கடன்களுக்கான வட்டிக்கு வரிச் சலுகை வழங்கலாம் என்று 2019 பட்ஜெட்டில் கூறப்பட்டது. இதற்காக 80EEB என்ற தனிப் பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவின் கீழ், எலெக்ட்ரிக் கார் கடனுக்கான வட்டித் தொகைக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சலுகை பெற முடியும்.
தனிநபர்கள் மட்டுமே இச்சலுகையை பெற முடியும். தனிநபர் தேவைக்காகவும், டாக்ஸி போன்ற தொழில் தேவைக்காகவும் இச்சலுகையை பெறலாம். இந்த வட்டிச் சலுகையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது, முதல்முறை எலெக்ட்ரிக் கார் வாங்கும்போது மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து வட்டிச் சான்றிதழை பெற வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது வரி ரசீது, கடன் ஆவணங்கள், வட்டிச் சான்றிதழ் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

Similar News