புதிய கொரோனா ‘‘நியோகோவ்’’- உயிரிழப்பு அதிகரிக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

புதிய கொரோனா ‘‘நியோகோவ்’’- உயிரிழப்பு அதிகரிக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

Update: 2022-01-29 07:00 GMT

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அப்போது சீனாவில் மட்டும் பரவிய கொரோனா தொற்று சில நாட்களில் உலக நாடுகளுக்கு பரவி இன்றுவரை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன. 

தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ்கள் தான் அதிகளவில் பரவினாலும் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தி வருவது ஒருவகையில் ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ‘‘நியோகோவ்’’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இதுபற்றி ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின்படி, நியோகோவ் வைரஸ், அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது, சுவாச நோயை ஏற்படுத்துகிற மெர்ஸ்-கோவ் உடன் தொடர்புடையதாகும். அதே நேரத்தில் இந்த நியோகோவ் வைரஸ் முற்றிலும் புதியது அல்ல. ஏனெனில் இது மெர்ஸ்-கோவ் வைரசுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையே காணப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

இதனிடையே, இந்த நியோகோவ் வைரஸ் பற்றி சீன விஞ்ஞானிகள் பரபரப்பு ஆய்வு முடிவுகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், நியோ கோவ் வைரஸ்கள் வவ்வால்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பகுப்பாய்வு செய்கிறபோது நியோகோவ் வைரசின் போக்கு சார்ஸ் கோவ்-2 வைரசைப்போல தோன்றுகிறது. இந்த வைரஸ் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும், என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், புதிய வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து கூடுதல் ஆய்வு தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு மத்தியில் ஒரு ஆறுதலான தகவலையும் ரஷ்யாவின் அரசு வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் அளித்திருக்கிறது. அதாவது, நியோகோவ் கொரோனா வைரஸ் தொடர்பாக சீன ஆராய்ச்சியாளர்களால் பெறப்பட்ட தரவுகளை வெக்டர் ஆராய்ச்சி மையம் அறிந்திருக்கிறது. தற்போது இந்த புதிய வைரஸ், மனிதர்களிடையே தீவிரமாக பரவுகிற தன்மை கொண்டதல்ல என்பது இப்போது தெரியவந்துள்ளது. எனினும் மேற்கொண்டு ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

Tags:    

Similar News