பொங்கலை கடந்த ஆண்டை விட உற்சாகமாக கொண்டாடிய குடிமகன்கள்.. டாஸ்மாக் மது விற்பனை விவரம்
பொங்கலை கடந்த ஆண்டைவிட உற்சாகமாக கொண்டாடிய குடிமகன்கள்.. டாஸ்மாக்கில் மது விற்பனை விவரம்
பொங்கல் பண்டிகையையொட்டி 606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும்.
இதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 606 கோடியே 72 லட்சம் ரூபாய்-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனி, ஞாயிற்று கிழமையுடன் முடிவடைகிறது. இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 380 ரூபாய் கோடி வரை மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் இன்றுடன் சேர்த்து, பொங்கல் விடுமுறையில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் 986 கோடி ரூபாய் அளவிற்குமது விற்பனையாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in