நகைச்சுவை நடிகர் வீட்டில் சோகம் ! கொரோனாவிடம் எச்சரிக்கையா இருங்கள் என உருக்கம் !

நகைச்சுவை நடிகர் வீட்டில் சோகம் ! கொரோனாவிடம் எச்சரிக்கையா இருங்கள் என உருக்கம் !

Update: 2021-05-07 08:46 GMT

பிரபல திரைப்பட நடிகரான பாலா சரவணனின் குடும்பத்தில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்துவிட்டதாகல் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பாலா சரவணன் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமாகி, அதன் பின் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அவர் ஒரு சிறந்த காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் ஒருநாள் கூத்து, திருடன் போலிஸ், ராஜா மந்திரி, டார்லிங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் மிகத்தீவிரமாக பரவி வரும் கொரோனா பிரபலங்களையும் வசதி படைத்தவர்களையும் விட்டுவைப்பது இல்லை. அந்த வகையில் நடிகர் பாலா சரவணன் வீட்டில் கொரோனாவால் ஒரு சோகம் நடந்துள்ளது. பாலா சரவணனின் தங்கையின் கணவர் கொரோனா காரணமாக உயிரிழந்துவிட்டதால் திரையுலகினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பாலா சரவணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உண்மையில் கொரோனாவின் 2ஆவது அலை மிக தீவிரமாக இருக்கும்போது பலரும் அதன் ஆபத்து புதியாமல் சுற்றிவருவதை காணமுடிகிறது. அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

newstm.in


 

Tags:    

Similar News