முதலமைச்சருக்கு கொரோனா... தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள அறிவுரை..!

முதலமைச்சருக்கு கொரோனா... தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள அறிவுரை..!

Update: 2022-01-04 11:41 GMT

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

என்னுடன் சமீபத்திய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


 

Similar News