அரசுப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளிக்கு ஒரு வாரம் பூட்டு..!

அரசுப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளிக்கு ஒரு வாரம் பூட்டு..!

Update: 2021-12-07 05:15 GMT

கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளியில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 59 பேர் மாணவர்கள், 10 பேர் பணியாளர்கள் ஆவர். அந்த மாணவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

457 கொரோனா மாதிரிகளில் 69 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து, சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக, அந்த பள்ளிக்கு சிக்கமகளூர் கலெக்டர் உத்தரவின்படி அடுத்த 7 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், அந்த பள்ளியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 90 பேர் மாணவர்கள்; 11 பேர் பணியாளர்கள் ஆவர். கொரோனா மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News