கட்டுக்குள் வராத கொரோனா... ஆந்திராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு !!

கட்டுக்குள் வராத கொரோனா... ஆந்திராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு !!

Update: 2021-05-17 17:34 GMT

கொரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலை நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப் படுகிறது. இந்நிலையில் அங்கு தினசரி பாதிப்பு 24,171 ஆக அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு பகுதி ஊரடங்கு உத்தரவு கடந்த மே 5ஆம் தேதியில் இருந்து மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  

newstm.in

 
 

Tags:    

Similar News