செஸ் ஒலிம்பியாட்டை மிரட்டியது கொரோனா.. 4 பேருக்கு உறுதி.
செஸ் ஒலிம்பியாட்டை மிரட்டியது கொரோனா.. 4 பேருக்கு உறுதி.. 900 பேருக்கு சோதனை..!;
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஹோட்டலில் இன்று 44 வது ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலை நிகழ்ச்சி குழுவில் பங்கேற்க உள்ள இருந்த நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 900 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.